TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - இணைய வழியிலான உரை மற்றும் நிகழ்வுகள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

இணைய வழியிலான உரை மற்றும் நிகழ்வுகள்
தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம்

இணைந்து வழங்கிய

இணைய வழியிலான உரை மற்றும் நிகழ்வுகள் - 100

நூறாவது சிறப்பு நிகழ்வு - உரையரங்கம்


தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து, 11-7-2021, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.00 மணிக்கு நடத்திய இணைய வழியிலான நூறாவது சிறப்பு நிகழ்விற்கு தென்காசி மாவட்டம், கடையநல்லூர், அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் பா. வேலம்மாள் அவர்கள் தலைமையுரையாற்றினார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் பொறியாளர் சு. சி. பொன்முடி அவர்கள் முன்னிலையுரையாற்றினார். சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் தலைவரும், திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறை இணைப்பேராசிரியருமான முனைவர் தி. நெடுஞ்செழியன் வரவேற்புரையாற்றி நிகழ்வினை நெறியாளுகை செய்தார்.

இச்சிறப்பு நிகழ்வில்; நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகழூர், திருக்கயிலாயப் பரம்பரை வேளாக்குறிச்சி ஆதினம் 18வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள், “நீரின்றி அமையாது உலகு” எனும் தலைப்பிலும், சமரசம் மாதமிருமுறை இதழின் துணையாசிரியர் திரு வி.எஸ். முஹம்மத் அமின் அவர்கள் “இளைஞனேத் துடித்தெழு...!” எனும் தலைப்பிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டப்பேரவைக்குழுத் தலைவரும், காட்டுமன்னார் கோயில் சட்டமன்ற உறுப்பினருமான திரு. சிந்தனை செல்வன் அவர்கள் “தமிழர் வாழ்வியலில் பௌத்தப் பண்பாட்டுக் கூறுகள்” எனும் தலைப்பிலும் சிறப்பு உரைகளை வழங்கினர்.

நிகழ்வின் இறுதியில்,தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி நன்றி கூறினார்.

இந்நிகழ்வில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலிருந்து பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி செய்திருந்தார்.


© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)