TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - இணைய வழியிலான உரை மற்றும் நிகழ்வுகள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

இணைய வழியிலான உரை மற்றும் நிகழ்வுகள்
தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம்

இணைந்து வழங்கிய

இணைய வழியிலான உரை மற்றும் நிகழ்வுகள் - 97

இசையின்றி அமையாது உலகு


தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து, 20-6-2021, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.00 மணிக்கு நடத்திய இணைய வழியிலான நிகழ்வில், இலங்கை, மட்டக்களப்பு, கிழக்குப் பல்கலைக்கழகம், சுவாமி விபுலானந்தா அழகிய கற்கைகள் நிறுவகம், சிரேஷ்ட விரிவுரையாளர் மற்றும் இசைத்துறைத் தலைவர் கலாநிதி. தெட்சணாமூர்த்தி பிரதீபன் அவர்கள் “இசையின்றி அமையாது உலகு” எனும் தலைப்பில் பாடல் மற்றும் இசையுடன் கூடிய சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா, இங்கிலாந்து, நார்வே, டென்மார்க், இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலிருந்து பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், தமிழ் மற்றும் இசை ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர். திருச்சிராப்பள்ளி சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் முனைவர் தி. நெடுஞ்செழியன் நிகழ்வை நெறிப்படுத்தினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி செய்திருந்தார்.

இவ்வுரையினை வலையொளியில் (You Tube) காணக் கீழ்க்காணும் இணைப்பிற்குச் செல்லலாம்.

https://youtu.be/fiTt-uTnlzU


© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)