TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள்
தேனித் தமிழ்ச் சங்கம்

மற்றும்

சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம்

இணைந்து வழங்கிய

இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள் - 10

திருவள்ளுவர் திருநாள் - சிறப்பு உரை நிகழ்வு


தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து, 14-1-2021 முதல் 16-1-2021 வரையிலான மூன்று நாட்கள் பொங்கல் திருநாள், திருவள்ளுவர் நாள் மற்றும் உழவர் திருநாள் சிறப்பு நிகழ்வுகளை இணைய வழியில் வழங்கிட ஏற்பாடு செய்திருந்தது.

இம்மூன்று நாட்கள் சிறப்பு நிகழ்வில், திருவள்ளுவர் திருநாள் சிறப்பு நிகழ்வாக, 15-1-2021, வெள்ளிக்கிழமை, மாலை 5.00 மணிக்கு திருவள்ளுவர் நாள் - சிறப்பு உரை நிகழ்வு நடைபெற்றது. இச்சிறப்பு உரை நிகழ்வில் காரைக்குடி, திருக்குறள் தேனீ, நல்லாசிரியர், மெ. செயம்கொண்டான் அவர்கள், தமிழ் மறை கற்போம்! தரணி ஆள்வோம்! எனும் தலைப்பிலும், அவரது மாணவர்கள், காரைக்குடி, திருக்குறள் செல்வன், இரா. பிரபாகரன் அவர்கள், உழவே தலை எனும் தலைப்பிலும், சிவகங்கை மாவட்டம், கோட்டையூர். திருக்குறள் செல்வி, மு. சுபிக்‌ஷா அவர்கள், எனைத்தானும் நல்லவை கேட்க! எனும் தலைப்பிலும் சிறப்புரைகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பிரான்சு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வினை திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்கள் நெறியாளுகை செய்தார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி அவர்கள் செய்திருந்தார்.

இவ்வுரைகளை வலையொளியில் (You Tube) காணக் கீழ்க்காணும் இணைப்புகளுக்குச் செல்லலாம்.


1. காரைக்குடி, திருக்குறள் தேனீ, நல்லாசிரியர் விருதாளர் திரு மெ. செயங்கொண்டான் அவர்களது “தமிழ் மறை கற்போம்! தரணி ஆள்வோம்!” உரை

https://youtu.be/x2plfnP9PxU

2. காரைக்குடி, திருக்குறள் செல்வன் விருதாளர் செல்வன் இர. பிரபாகரன் அவர்களது “உழவே தலை” உரை

https://youtu.be/ZbrRUS9VDBI

2. சிவகங்கை மாவட்டம், கோட்டையூர். திருக்குறள் செல்வி விருதாளர் செல்வி மு. சுபிக்‌ஷா அவர்களது “எனைத்தானும் நல்லவை கேட்க!” உரை

https://youtu.be/8VNu9jkc04s


© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)