|
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.
|
|
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019 |
இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள் |
|
தேனி மாவட்டம், வடுகபட்டி, சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை, அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் சேவா அறக்கட்டளை, தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து வழங்கிய இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள் - 11 அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் பிறந்தநாள் சொற்பொழிவு ![]() தேனி மாவட்டம், வடுகபட்டி, சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை, அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் சேவா அறக்கட்டளை, தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு, 28-1-2021, வியாழக்கிழமை, மாலை 5.00 மணிக்கு இணைய வழியில் நடத்திய சிறப்பு நிகழ்வில், கோயம்புத்தூர், பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர், முனைவர் இராம. பரிமளம் அவர்கள், வள்ளலார் காட்டிய வாழ்க்கை நெறிகள் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பிரான்சு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வினை திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்கள் நெறியாளுகை செய்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி அவர்கள் செய்திருந்தார். https://youtu.be/Prx7J5CXaiE ![]() |
© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள் இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது ![]() முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (www.muthukamalam.com) (ISSN: 2454-1990)
|



