TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள்
சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,

தேனித் தமிழ்ச் சங்கம்

மற்றும்

திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம்

இணைந்து வழங்கிய

இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள் - 14

உலக நீர் நாள் - நீர் வளங்களும் நீர் மேலாண்மையும் - நான்கு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்


சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து உலக நீர் நாள் சிறப்பு நிகழ்வாக, 21-3-2021 முதல் 24-3-2021 வரை நான்கு நாட்கள் நீர் வளங்களும் நீர் மேலாண்மையும் எனும் பொருண்மையிலான இணைய வழியிலான பன்னாட்டுக் கருத்தரங்கத்தினை நடத்தின.

இக்கருத்தரங்கத்திற்கு, திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையுரையாற்றினார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் சு. சி. பொன்முடி அவர்கள் முன்னிலையுரையாற்றினார். சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழ் மொழி (ம) மொழியியல் புலத்தின் உதவிப்பேராசிரியர் முனைவர் நா. சுலோசனா அவர்கள் வரவேற்புரையாற்றினார். இப்பன்னாட்டுக் கருத்தரங்கினை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார்.

இப்பன்னாட்டுக் கருத்தரங்க நிகழ்வில், 21-3-2021, ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு, தேனி மாவட்டம், உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியின் தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர், முனைவர் மு. அப்துல்காதர் அவர்கள் வறண்ட பூமியை வளமாக்கிய முல்லைப் பெரியாறு எனும் தலைப்பிலும், 22-3-2021, திங்கள் கிழமை, மாலை 5.00 மணிக்கு, திருச்சி, கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி, தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர், திரு கி. சதீஷ்குமார் அவர்கள் பழந்தமிழரும் நீர்நிலைகளும் எனும் தலைப்பிலும், 23-3-2021, செவ்வாய்க்கிழமை, மாலை 5.00 மணிக்கு, சென்னை, பூவுலகின் நண்பர்கள் குழு நிர்வாகிகளில் ஒருவரும், ஆவணப்பட இயக்குநருமான திரு ஆர். ஆர். சீனிவாசன் அவர்கள் ஆறுகளும் பருவநிலை நெருக்கடிகளும் எனும் தலைப்பிலும், 24-3-2021, புதன் கிழமை, மாலை 5.00 மணிக்கு, சுவிட்சர்லாந்து, சூரிச் மாநிலம், சுவிஸ் அரசுப்பள்ளி ஆசிரியர் மற்றும் உடல், உள நலப் பராமரிப்பாளருமான திருமதி மதிவதணி (எ) கவிஞர் வாணமதி அவர்கள் சுவிட்சர்லாந்தில் நீர்ப் பயன்பாடும் பாதுகாப்பும் எனும் தலைப்பிலும் சிறப்புரைகளை வழங்கினர். முடிவில் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர், ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி, தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியரும், தேனித் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினருமான முனைவர் லெ. அலமேலு அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

இப்பன்னாட்டுக் கருத்தரங்க நிகழ்வில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பிரான்சு, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இப்பன்னாட்டுக் கருத்தரங்கத்திற்கு சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழ் மொழி (ம) மொழியியல் புலத்தின் உதவிப்பேராசிரியர் முனைவர் நா. சுலோசனா அவர்கள் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார்.

இப்பன்னாட்டுக் கருத்தரங்க நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி அவர்கள் செய்திருந்தார்.


© 2018-2024 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)