TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள்
தேனித் தமிழ்ச் சங்கம்

மற்றும்

சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம்

இணைந்து வழங்கிய

இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள் - 15

அம்பேத்கர் பிறந்தநாள் சொற்பொழிவு


தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து 14-4-2020, புதன் கிழமை, மாலை 5.00 மணிக்கு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை, மேனாள் தலைவர் முனைவர் உ. பிரபாகரன் அவர்கள், அம்பேத்கரின் சிந்தனைகள் எனும் தலைப்பில் இணைய வழியில் சிறப்புரையாற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. அன்றைய நாளில், முனைவர் உ. பிரபாகரன் அவர்கள் மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அன்று அவர் கலந்து கொள்ள இயலாத நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, முனைவர் உ. பிரபாகரன் அவர்களுக்கு மாற்றாக, அகில இந்திய பஞ்சாப் நேசனல் வங்கி அலுவலர்கள் சங்கத்தின் தலைவர் திரு ஆர். செல்வராஜன் அவர்கள் ‘அம்பேகரின் சிந்தனைகள்’ எனும் தலைப்பில் உரையினை வழங்கினார். இந்நிகழ்வில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பிரான்சு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வினை திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்கள் நெறியாளுகை செய்தார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி அவர்கள் செய்திருந்தார்.



© 2018-2024 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)