TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள்
நாகப்பட்டினம், அ. துரைச்சாமி நாடார் மரகதவள்ளியம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), தமிழ்த்துறை,

தேனித் தமிழ்ச் சங்கம்

மற்றும்

சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம்

இணைந்து வழங்கிய

இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள் - 3

பன்முக நோக்கில் வளர்தமிழ் இலக்கியங்கள் - இணைய வழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம்


நாகப்பட்டினம், அ. துரைச்சாமி நாடார் மரகதவள்ளியம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), தமிழ்த்துறை, தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து, 6-7-2020 முதல் 11-7-2020 வரை ஆறு நாட்கள் மாலை 5.00 மணிக்கு இணைய வழியில், பன்முக நோக்கில் வளர்தமிழ் இலக்கியங்கள் எனும் பொருண்மையிலான இணைய வழிப் பன்னாட்டுக் கருத்தரங்கத்தினை நடத்தின.

இப்பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் தொடக்க நாளான 6-7-2020, திங்கள் கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெற்ற முதல் நாள் நிகழ்வில், மதுரை. மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மொழியியல் மற்றும் தகவலியல் புலத்தின் மேனாள் தலைவர், தகைசால் பேராசிரியர் முனைவர் வீ. ரேணுகாதேவி அவர்கள் விழித்திரு பெண்ணே... விழித்திரு... எனும் தலைப்பிலும், 7-7-2020, செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வில் சிவகங்கை மாவட்டம், கோவிலூர், நாச்சியப்ப சுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கணினியியல்துறைத் தலைவர் முனைவர் க. கலா காசிநாதன் அவர்கள் உயிரளவியல் தொழில்நுட்பப் பயன்பாடு எனும் தலைப்பிலும், 8-7-2020, புதன் கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெற்ற மூன்றாம் நாள் நிகழ்வில் சென்னை, பொதிகைத் தொலைக்காட்சி நிலையம், மேனாள் நிகழ்ச்சிகள் இயக்குநர், கலைமாமணி முனைவர் பால. இரமணி அவர்கள் பாரதி என்றொரு பாவலன் எனும் தலைப்பிலும், 9-7-2020, வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெற்ற நான்காம் நாள் நிகழ்வில் பெங்களூர், மல்யா ஆதி பன்னாட்டுப் பள்ளி, ஆசிரியர், இந்திரா சரண் ஜம்மாலத்தினி அவர்கள் உலகமயமாக்கலில் மொழி வளம் எனும் தலைப்பிலும், 10-7-2020, வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெற்ற ஐந்தாம் நாள் நிகழ்வில் சிவகாசி, எஸ். எப். ஆர். மகளிர் கல்லூரி (தன்னாட்சி), தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர், முனைவர் மா. பத்மபிரியா அவர்கள் பெண் எனும் பெருங்கொடை எனும் தலைப்பிலும், 11-7-2020, சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெற்ற ஆறாம் நாள் நிகழ்வில் இலண்டன், பணி நிறைவு பெற்ற பேராசிரியர், பேராசிரியர் க. சிவானந்தன் அவர்கள் வரலாற்றினூடாகத் தமிழ் ஆங்கில இலக்கியங்கள்: ஓர் அறிமுக ஒப்பீடு எனும் தலைப்பிலும் சிறப்புரைகளை வழங்கினர்.

இந்நிகழ்விற்கு திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் தலைவரும், திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரி, தமிழ்த்துறையில் பணி நிறைவு பெற்ற இணைப்பேராசிரியருமான முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்கள் நெறியாளுகை செய்தார்.

இந்நிகழ்வில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பிரான்சு, அமெரிக்கா, இலண்டன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்விற்கு நாகப்பட்டினம், அ. துரைச்சாமி நாடார் மரகதவள்ளியம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தெ. வாசுகி அவர்கள் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார்.

இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி அவர்கள் செய்திருந்தார்.


© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)