TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள்
தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறை, தேனி மாவட்டம்.

தேனித் தமிழ்ச் சங்கம்

மற்றும்

சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம்

இணைந்து வழங்கிய

இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள் - 4

விடுதலை நாள் - சிறப்புப் பட்டிமன்றம்


தமிழ்நாடு அரசு, தேனி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை, தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து இந்திய விடுதலை நாளை முன்னிட்டு, வருங்கால நல்வாழ்வுக்குத் தேவை அறிவியலே! ஆன்மிகமே! எனும் தலைப்பிலான சிறப்புப் பட்டிமன்றத்தை இணைய வழியில் வழங்கிட ஏற்பாடு செய்திருந்தது.

15-8-2020, சனிக்கிழமை, மாலை 5.00 மணிக்கு நடைபெற்ற இச்சிறப்புப் பட்டிமன்ற நிகழ்வுக்கு, திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையுரையாற்றினார். தமிழ் வளர்ச்சித் துறையின் தேனி மாவட்ட உதவி இயக்குநர் திரு பெ. இளங்கோ அவர்கள் முன்னிலையுரையாற்றினார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி அவர்கள் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ. விச்யராகவன் அவர்கள் விடுதலை நாள் சிறப்புப் பட்டிமன்ற நிகழ்வினைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார்.

சென்னை, பொதிகைத் தொலைக்காட்சி நிலையத்தின் மேனாள் நிகழ்ச்சிகள் இயக்குநரும், தமிழ்நாடு அரசின் முதல் கம்பன் விருதாளருமான கலைமாமணி முனைவர் பால. இரமணி அவர்களை நடுவராகக் கொண்டு, வருங்கால நல்வாழ்வுக்குத் தேவை அறிவியலே! ஆன்மிகமே! எனும் தலைப்பில் நடைபெற்ற இப்பட்டிமன்றத்தில், அறிவியலே! எனும் அணியில் சிவகாசி, எஸ்.எப்.ஆர் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர் முனைவர் மா. பத்மபிரியா, சென்னை, ஸ்ரீ சேஷாத்ரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆசிரியரும், சென்னை, ரெயின்போ பண்பலை வானொலியின் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான சொல்லருவி கோ. மணி மற்றும் தேனி மாவட்டம், தேனி கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியரும், தேனித் தமிழ்ச் சங்கத்தின் துணைச்செயலாளருமான திருமதி மு. ரேணுகாதேவி ஆகியோரும், ஆன்மிகமே! எனும் அணியில் நாகப்பட்டினம், அ. து. ம. மகளிர் கல்லூரி (தன்னாட்சி), தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர் முனைவர் ந. புனிதலெட்சுமி, காரைக்குடி, மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் திரு பழ. பாஸ்கரன் மற்றும் சென்னை, ஸ்ரீ சேஷாத்ரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியரும், சென்னை, ரெயின்போ பண்பலை வானொலி அறிவிப்பாளருமான திருமதி ரேகா மணி ஆகியோரும் பேசினர்.

பட்டிமன்றத்தின் நிறைவில் தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் திரு சு. சி. பொன்முடி அவர்கள் நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்வில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பிரான்சு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி அவர்கள் செய்திருந்தார்.


© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)