TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள்
மதுரை, ஸ்ரீ நாராயணகுரு பண்பாட்டுப் பேரவை,

தேனித் தமிழ்ச் சங்கம்

மற்றும்

சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம்

இணைந்து வழங்கிய

இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள் - 6

ஸ்ரீ நாராயணகுரு பிறந்தநாள் சொற்பொழிவு


தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து 29-8-2020, சனிக்கிழமை, மாலை 5.00 மணிக்கு திருவனந்தபுரம், கேரளப் பல்கலைக்கழகம் தமிழ்த்துறை, மேனாள் தலைவர் முனைவர் காஞ்சனா அவர்கள், ஸ்ரீ நாராயணகுருவின் பார்வையில் குடும்பக் கட்டமைப்பு எனும் தலைப்பில் சிறப்புரையினை வழங்கினார்.

இந்நிகழ்வில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பிரான்சு, அமெரிக்கா, இலண்டன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் இறுதியில் மதுரை, ஸ்ரீ நாராயணகுரு பண்பாட்டுப் பேரவையின் பொதுச்செயலாளர், வழக்கறிஞர் எஸ். இளங்கோவன் நன்றியுரை வழங்கினார்.

இந்நிகழ்வினை திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்கள் நெறியாளுகை செய்தார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி அவர்கள் செய்திருந்தார்.

இவ்வுரையினை வலையொளியில் (You Tube) காணக் கீழ்க்காணும் இணைப்பிற்குச் செல்லலாம்.

https://youtu.be/sdc7Nq8X438


© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)