TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள்
சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,

தேனித் தமிழ்ச் சங்கம்

மற்றும்

சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம்

இணைந்து வழங்கிய

இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள் - 7

ஆசிரியர்கள் நாள் சிறப்பு நிகழ்வு - ஆசிரியர்களின் அனுபவங்கள்


சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து, 5-9-2020 அன்று ஆசிரியர் நாள் சிறப்பு நிகழ்வாக, 14 ஆசிரியர்களின் சுவையான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஆசிரியர்களின் அனுபவங்கள் எனும் சிறப்பு நிகழ்வினை நடத்தியது.

இந்த ஆசிரியர்களின் அனுபவங்கள் சிறப்பு நிகழ்விற்கு, திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையுரையாற்றினார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி அவர்கள் முன்னிலையுரையாற்றினார். சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ் மொழி மற்றும் மொழியியல் புலத்தின் உதவிப்பேராசிரியர் முனைவர் நா. சுலோசனா அவர்கள் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் நிகழ்வினைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார்.

இணைய வழியில் நடைபெற்ற இந்தச் சிறப்பு நிகழ்வில்;

1. திரு மணிலால், கணித ஆசிரியர் (பணி நிறைவு), பழனியப்பா நினைவு மேல்நிலைப்பள்ளி, பழனிசெட்டிபட்டி, தேனி.

2. திரு ப. ஜார்ஜ், இடைநிலை ஆசிரியர், சி. எஸ். ஐ. தொடக்கப்பள்ளி, கீழ்ப்பாக்கம் கிராமம், அரக்கோணம்.

3. முனைவர் லீமா ரோஸ், வேதியியல் துறைத்தலைவர், புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.

4. திருமதி இந்திரா பார்த்தசாரதி, ஆசிரியர் (பணி நிறைவு), ஜெய்கோபால் கரோடியா நேசனல் மேல்நிலைப்பள்ளி, சென்னை.

5. புலவர் மு. சொக்கப்பன், தலைமையாசிரியர் (பணி நிறைவு), ஸ்ரீ விவேகானந்தா வித்யாவனப்பள்ளி, ஸ்ரீ ராமகிருஷ்ணா தபோவனம், திருப்பராய்த்துறை, திருச்சிராப்பள்ளி.

6. திருமதி பி. சாரதா, ஒருங்கிணைப்பு ஆணையர் (சாரணியர்), தேனி கல்வி மாவட்டம் மற்றும் இந்தித்துறைத் தலைவர், தே. மே. இ. நா. உ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துத்தேவன்பட்டி, தேனி.

7. அம்பை ஆ. பாலசரஸ்வதி, ஆசிரியர் (பணி நிறைவு), தமிழ்ச்செம்மல் விருதாளர், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம்.

8. திரு பொ. கதிரேசன், தலைமையாசிரியர் (பணி நிறைவு), என். எஸ். கே. பி. மேல்நிலைப்பள்ளி, கூடலூர், தேனி மாவட்டம்.

9. திருமதி பா. சுமதி, தலைமையாசிரியர், சாரதா நடுநிலைப்பள்ளி, பெல் வளாகம், கைலாசபுரம், திருச்சிராப்பள்ளி.

10. திரு மு. மகேந்திரபாபு, தமிழாசிரியர், ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, இளமனூர், மதுரை.

11. திரு ச. கிறிஸ்துஞான வள்ளுவன், தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, நரசிங்கக்கூட்டம், கடலாடி ஒன்றியம், இராமநாதபுரம் மாவட்டம்.

12. திரு சதீஷ்குமார், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, காவிரி நுண்கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.

ஆகியோர் தங்களது ஆசிரியப் பணியிலான சுவையான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் திண்டுக்கல், தமிழாசிரியர் மு. தமிழ்ப்பெரியசாமி, சென்னை, செட்டிநாடு வித்யாஷ்ரமம் கவிஞர் சுரா ஆகியோர் கலந்து கொள்ள இயலவில்லை,

இந்நிகழ்வின் இறுதியில், தேனி, நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியரும், தேனித் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினருமான முனைவர் த, தாழைச்செல்வி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

இந்நிகழ்வில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பிரான்சு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்விற்கு சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ் மொழி மற்றும் மொழியியல் புலத்தின் உதவிப்பேராசிரியர் முனைவர் நா. சுலோசனா அவர்கள் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி அவர்கள் செய்திருந்தார்.

இந்நிகழ்வினை வலையொளியில் (You Tube) காணக் கீழ்க்காணும் இணைப்புகளுக்குச் செல்லலாம்.


1. சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், உதவிப்பேராசிரியர் முனைவர் நா. சுலோசனா அவர்களது வரவேற்புரை மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத் தலைவர் முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்களது தலைமையுரை:

https://youtu.be/wdGvQlCArAk

2. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்களது வாழ்த்துரை:

https://youtu.be/A5sf5XNQV9Y

3. திரு மணிலால், கணித ஆசிரியர் (பணி நிறைவு), பழனியப்பா நினைவு மேல்நிலைப்பள்ளி, பழனிசெட்டிபட்டி, தேனி அவர்களது உரை:

https://youtu.be/WbbpM-xuYxY

4. >திரு ப. ஜார்ஜ், இடைநிலை ஆசிரியர், சி. எஸ். ஐ. தொடக்கப்பள்ளி, கீழ்ப்பாக்கம் கிராமம், அரக்கோணம் அவர்களது உரை:

https://youtu.be/u_zNv-G8_Ew

5. முனைவர் லீமா ரோஸ், வேதியியல் துறைத்தலைவர், புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி அவர்களது உரை:

https://youtu.be/FiJ29ou3t2s

6. திருமதி இந்திரா பார்த்தசாரதி, ஆசிரியர் (பணி நிறைவு), ஜெய்கோபால் கரோடியா நேசனல் மேல்நிலைப்பள்ளி, சென்னை அவர்களது உரை:

https://youtu.be/zmMo5ntlIbo

7. புலவர் மு. சொக்கப்பன், தலைமையாசிரியர் (பணி நிறைவு), ஸ்ரீ விவேகானந்தா வித்யாவனப்பள்ளி, ஸ்ரீ ராமகிருஷ்ணா தபோவனம், திருப்பராய்த்துறை, திருச்சிராப்பள்ளி அவர்களது உரை:

https://youtu.be/MMNT5wRYC3U

8. திருமதி பி. சாரதா, ஒருங்கிணைப்பு ஆணையர் (சாரணியர்), தேனி கல்வி மாவட்டம் மற்றும் இந்தித்துறைத் தலைவர், தே. மே. இ. நா. உ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துத்தேவன்பட்டி, தேனி அவர்களது உரை:

பகுதி 1 - https://youtu.be/HLDeVgmjiKM

பகுதி 2 - https://youtu.be/jL_XxlLrg8c

9. அம்பை ஆ. பாலசரஸ்வதி, ஆசிரியர் (பணி நிறைவு), தமிழ்ச்செம்மல் விருதாளர், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம் அவர்களது உரை:

https://youtu.be/FwYQzECDHYA

10. திரு பொ. கதிரேசன், தலைமையாசிரியர் (பணி நிறைவு), என். எஸ். கே. பி. மேல்நிலைப்பள்ளி, கூடலூர், தேனி மாவட்டம் அவர்களது உரை:

https://youtu.be/3xOTD57NN_o

11. திருமதி பா. சுமதி, தலைமையாசிரியர், சாரதா நடுநிலைப்பள்ளி, பெல் வளாகம், கைலாசபுரம், திருச்சிராப்பள்ளி அவர்களது உரை:

https://youtu.be/9HvV_7Cppnc

12. திரு மு. மகேந்திரபாபு, தமிழாசிரியர், ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, இளமனூர், மதுரை அவர்களது உரை:

https://youtu.be/S2hrlskTpLc

13. திரு ச. கிறிஸ்துஞான வள்ளுவன், தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, நரசிங்கக்கூட்டம், கடலாடி ஒன்றியம், இராமநாதபுரம் மாவட்டம் அவர்களது உரை:

https://youtu.be/BDmxXOr2-BA

14. திரு சதீஷ்குமார், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, காவிரி நுண்கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி அவர்களது உரை:

https://youtu.be/u6qbR7w2MGY

15.தேனி, நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியரும், தேனித் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினருமான முனைவர் த, தாழைச்செல்வி அவர்களது நன்றியுரை:

https://youtu.be/fFRG-u6bc_o


© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)