TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள்
சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,

தேனித் தமிழ்ச் சங்கம்

மற்றும்

சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம்

இணைந்து வழங்கிய

இணைய வழியிலான சிறப்பு நிகழ்வுகள் - 8

முத்தான மூன்று பொழிவுகள் - பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் - பொழிவு


சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து, 15-9-2020 முதல் 17-9-2020 வரையிலான மூன்று நாட்கள் முறையே, பேரறிஞர் அண்ணா, கரிசல் இலக்கியத்தின் தந்தை கி. ராஜநாராயணன் மற்றும் தந்தை பெரியார் பிறந்த நாட்களைச் சிறப்பிக்கும் வகையில் முத்தான மூன்று பொழிவுகள் எனும் சிறப்புப் பொழிவுகளை வழங்கியது.

இந்த முத்தான மூன்று பொழிவுகள் சிறப்பு நிகழ்விற்கு, திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையுரையாற்றினார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி அவர்கள் முன்னிலையுரையாற்றினார். சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ் மொழி மற்றும் மொழியியல் புலத்தின் உதவிப்பேராசிரியர் முனைவர் நா. சுலோசனா அவர்கள் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் நிகழ்வினைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார்.

இம்மூன்று நாட்கள் சிறப்புப் பொழிவு நிகழ்வில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் சிறப்புப் பொழிவாக, 15-9-2021, செவ்வாய்க்கிழமை, மாலை 5.00 மணிக்கு சென்னை, சமூக ஆர்வலர் மருத்துவர் நா. எழிலன் அவர்கள் நவீனத் தமிழகத்தின் சிற்பி: பேரறிஞர் அண்ணா எனும் தலைப்பில் சிறப்புப் பொழிவினை வழங்கினார்.

நிகழ்வின் இறுதியில், தேனி மாவட்டம், உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி, தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியரும், தேனித் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினருமான முனைவர் மு. அப்துல்காதர் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

இந்நிகழ்வில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பிரான்சு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்விற்கு சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ் மொழி மற்றும் மொழியியல் புலத்தின் உதவிப்பேராசிரியர் முனைவர் நா. சுலோசனா அவர்கள் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி அவர்கள் செய்திருந்தார்.

இவ்வுரையினை வலையொளியில் (You Tube) காணக் கீழ்க்காணும் இணைப்பிற்குச் செல்லலாம்.

https://youtu.be/lIeOLqwRsKY


© 2018-2024 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)