TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - தேன் துளிகள் கவியரங்கம் 5 விழா (22-2-2020)

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

காணொளிகள்
தேனித் தமிழ்ச் சங்கத்தின் ‘தேன் துளிகள் - கவியரங்கம் நிகழ்வின் ஐந்தாம் அமர்வுத் தொடக்க விழா தலைவர் தேனி மு. சுப்பிரமணி தலைமையில், செயலாளர் சு.சி.பொன்முடி, துணைச்செயலாளர் மு. ரேணுகாதேவி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. திருச்சி, புனித வளனார் கல்லூரித் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் (பணி நிறைவு) மற்றும் திருச்சி, சி.பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக்கழகத்தின் தலைவர் முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்கள் கவியரங்கத்தைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர் முனைவர் ரா. நாகேந்திரன் அவர்களது தலைமையில் 30 கவிஞர்கள் பங்கேற்ற ‘இனி (ய) தமிழ் மொழியே...!’எனும் தலைப்பிலான கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதைகளிலிருந்து மூன்று பரிசுக்குரிய கவிதைகளைத் தேர்வு செய்து, அவர்களுக்கு முதல் பரிசாக ரூ.500/-, இரண்டாம் பரிசாக ரூ.300/- மூன்றாம் பரிசாக ரூ.200/- மதிப்பிலான புத்தகப் பரிசினையும் பாராட்டுச் சான்றிதழையும், கவியரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழையும் மாவட்ட நூலகராகப் பணியாற்றி பணி நிறைவு பெற்ற மதுரை, கவிஞர் ந. பாண்டுரங்கன் அவர்கள் வழங்கினார். முன்னதாகச் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் போ. சிதம்பரம் அவர்கள் வரவேற்புரையாற்றினார். கவியரங்கத் துணை ஒருங்கிணைப்பாளர் பூ. ஆனந்தகுமார் நன்றியுரையாற்றினார்.

தேன் துளிகள் கவியரங்கம் 5 - ‘இனி (ய) தமிழ் மொழியே...!’ (22-2-2020) காணொளிகள்

(சிறிய நிகழ்படத்தின் கீழுள்ள தகவல் குறிப்பில் சொடுக்கி, நிகழ்பட இணைப்பிற்குச் செல்லலாம்)


© 2018-2024 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)